search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரட்டுப்பள்ளம் அணை"

    • பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.
    • யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றனர்.

    பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீரினை குடிப்பதற்காக வனவிலங்குகள் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் வருவது உண்டு. அதில் குறிப்பாக யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள சாலைகளிலும், அதனையொட்டி உள்ள வனப்பகுதிகளிலும் ஒற்றை யானையை சுற்றி திரிந்து வருகின்றது. இதனால் மலைப்பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும், யானையை பார்த்தவுடன் செல்பி எடுப்பது, செல்போனில் படம் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த சம்பவத்தினால் வன விலங்குகள் வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், வாகனத்தை சேதப்படுத்துவதும் தற்போது நிகழ்ந்து வருகிறது. அவ்வாறு நிகழாமல் இருக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைத்து வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    • புதிய ஆயக்காட்டு பாசனப் பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணை 33 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும்.

    மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் பொழியும் மழை நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் பாசனத் திற்காகவும், வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் தண்ணீராகவும் பயன்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் பாசனத்திற்காக புதிய ஆயக்காட்டு பாசனப் பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் நேரடியாக 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெருகின்றன. இதனைத் தொடர்ந்து இன்று வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய வரட்டுப்பள்ளம் அணை எட்டி உள்ளது.
    • உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவான 33.5 அடியாகும்.

    கடந்த வாரம் பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வந்தது.

    இதையடுத்து அணை யின் நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லா ததால் முழு கொள்ளளவான 33.5 அடியாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த நேற்று மற்றும் நேற்று முன்தினம் என தொடர்ந்து 2 நாட்கள் அந்தியூர் மற்றும் பர்கூர் மலை சுற்றுப் பகுதி மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் அணையின் முழு கொள்ள ளவான 33.5 அடியை எட்டி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 43 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த மழைப் பொழிவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×